Namma Maruthuvam 0.0.1

许可: 免费 ‎文件大小: N/A
‎用户评分: 3.0/5 - ‎1 ‎评分

Namma maruthuvam 应用程序是给泰米尔西达马鲁图瓦姆信息只。我们正在为人类疾病提供所有类型的解决方案信息。我们将使用这种方法,我们不需要去医院或医疗商店。

这个程序包含糖尿病患者,血压,记忆缺陷,桩,牙齿疼痛,耳痛等解决方案...

这个程序给你的解决方案,你的健康疾病基于古老的泰米尔药用方法称为西塔, 西塔马鲁图瓦姆, 泰米尔马鲁图瓦姆, 帕蒂瓦伊蒂亚姆, 维图瓦姆, 西达瓦伊蒂亚姆, 泰米尔瓦蒂亚姆, 关键词: 健康提示, 乌纳夫马龙图, 穆利盖瓦蒂亚姆, 穆利盖马鲁图瓦姆, eliya maruthuvam, 轻松 vaithiyam, 家庭补救措施, 凯瓦伊蒂亚姆, 帕蒂瓦伊蒂亚姆, 帕蒂瓦伊蒂亚姆, 纳图马鲁图瓦, 西达马鲁图瓦尔, 泰米尔马鲁图瓦尔, 纳图马鲁图瓦尔, 阿迪马鲁图瓦姆, 纳图瓦蒂亚姆, 泰米尔瓦蒂亚姆, 纳马马鲁图瓦姆, 西达医学, 西达马鲁图瓦姆, 西达瓦图瓦姆, 西达瓦图瓦姆.

சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவ முறையாகும்.தமிழ்நாட்டுப் பண்டைச் சித்தர்கள் இதனைத் தமிழ் மொழியில் உருவாக்கித் தந்துள்ளார்கள்.சித்தர்கள் தங்கள் அருள் ஞான அறிவால் அதனை நன்குணர்ந்து மிகவும் துல்லியமாகக் கூறியுள்ளனர்.சித்த மருத்துவம் எப்போது தோன்றியது என்று வரையறுத்துக் கூறவியலாது.அது பாரம்பரிய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது.

இயற்கையில் கிடைக்ககூடிய எண்ணற்ற புல், பூண்டு,மரம்,செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து, முதலியவைகளைக் கொண்டும், நவரத்தின, நவலோகங்களைக் கொண்டும், இரசம், கந்தகம், கற்பூரம், தாரம், அயம், பவளம், துருசு முதலியவைகளைக் கொண்டும், திரிகடுகு, திரிசாதி, திரிபலை, அரிசி வகை, பஸ்பம், செந்தூரம்,மாத்திரை, கட்டுகள், பொடிகள், குளித்தைலங்கள், கஷாயங்கள் முதலிய பல பிரிவு வகைகளாக வியாதிகளுக்கு, நல்ல தண்ணீர், கடல் நீர், ஊற்று நீர், கிணற்று நீர், முதலிய பல நீர் வகைகளைக் கொண்டும், பால், தேன், சீனி, நெய் முதலியனக் கொண்டும், தெங்கு, புங்கு,புண்ணை,வேம்பு, எள் முதலிய தாவர எண்ணெய் வகைகளைக் கொண்டும் உருவாக்கப்பட்ட ஒரு மருத்துவ முறையாகும்.

சித்த மருத்துவம் சித்த வைத்தியத்துடன் நின்றுவிடுவதில்லை.சித்த மருத்துவத்தில் சிறந்து விளங்கும் மெய்ஞ்ஞானம், விஞ்ஞானம், உடல் தத்துவம், சமயம், சோதிடம், பஞ்சபட்சி, சரம், மருந்து, மருத்துவம், பரிகாரம், போன்ற ஐயந்திரிபறக் கற்றுணர வேண்டும்.சங்க இலக்கியங்களில் மருத்துவத்திற்கு அடிப்படையான பொருள்களுக்கான சான்றுள்ளன.

சோதிடம், பஞ்சபட்சி துலங்கிய சரநூல் மார்க்கம் கோதறு வகார வித்தை குருமுனி ஓது பாடல் தீதிலாக் கக்கிடங்கள் செப்பிய கன்ம காண்டம் ஈதெலாம் கற்றுணர்ந் தோரகற்றுணர்ந் தோர் இவர்களே வைத்தியராவர்..... (-- சித்தர் நாடி நூல் 18 --)

சித்தர்கள் மனித சரீரத்தை மூன்று வகையாக பிரித்து உள்ளார்கள்.சரீரமாகிய தேகத்தில் உயிர் தங்கியிருக்க காரணமாகிய வாதம் (காற்று), பித்தம் (உஷ்ணம்), சிலேத்துமம் (நீர்), இரசதாது, இரத்ததாது, மாமிசதாது, மேதோதாது, அஸ்திதாது, மச்சைதாது, சுக்கிலதாது, மலம், மூத்திரம் என்னும் பன்னிரண்டும் நாம் உண்ணும் உணவிலிருந்து பிரிக்கப்பட்டு, பலத்தையும் இயக்கத்தையும் கொடுக்கிறது.

版本历史记录

  • 版本 0.0.1 发布于 2016-05-24

软件信息